அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி இந்திய பெண்கள் அணி வெற்றி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி  இந்திய பெண்கள் அணி வெற்றி.

இந்திய பெண்கள் கோக்கி அணி, அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உலக தர வரிசையில் 12-வது இடம் வகிக்கும் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் 4-வது இடத்தில் இருக்கும்அவுஸ்ரேலியா வீழ்த்தியது.

21-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி கப்டன் ராணி ராம்பால் வெற்றிக்கான கோலை அடித்தார். கடைசியாக ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, அவுஸ்ரேலியா சந்தித்தது. அதில் அவுஸ்ரேலிய அணி 6-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்ததது. அந்த தோல்விக்கு இந்திய அணி நேற்று பழிதீர்த்தது.

அவுஸ்ரேலியாவில் நடந்து வரும் 4 நாடுகள் இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அவுஸ்ரேலியாவிடம் தோல்வி கண்டது.