புலனாய்வாளர்களால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு இடையூறு

முல்லைத்தீவு – கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில் புலனாய்வாளர்களால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கச்செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ரியந்த பர்னாந்து தலைமையில், இலங்கை ஆசிரியர் சங்க வடமத்திய மாகாண இணைப்பாளர் ஜே.எம்.மில்லியாஸ், இலங்கை ஆசிரயர் சங்க வவுனியா மாவட்ட தலைவர் பாஸ்கர மூர்த்தி நேசராஜா உள்ளிட்ட குழுவினர் 15.07.2021 கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்திற்கு வருகை தந்திருந்தனர்.