அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி

அவுஸ்திரேலியா மெல்பேன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் பலியானவர் காலி மஹிந்தா கல்லூரி, மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் மாணவரான குஷான் நிரோஷன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்று மாலை 06.00 மணிக்கு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ள தாக அந்நாட்டு வைத்திய சாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.