உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 30 நாடாளுன்ற உறுப்பினர்கள் இதுவரையில் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

இந்த நிலையில், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி, இதுவரையில் தங்களுக்கு கிடைக்கவில்லை என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அது தங்களுக்கு கிடைத்ததன் பின்னர், கட்சி என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.