பேராசிரியர் மோகான் முனசிங்கவுக்கு விருது

இலங்கை இயற்பியலாளரும், பொருளாதார நிபுணருமான பேராசிரியர் மோகான் முனசிங்க இந்த ஆண்டின் ;ப்ளூ பிளானட் ; விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கான நோபல் விருதுக்கு சமமான மிக உயர்ந்த சர்வதேச விருதான ப்ளூ பிளானட் விருது இவ்வாண்டு 30 ஆவது முறையாக வழங்கப்படுகிறது.

உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியதற்காக பணிப்பாளர்கள் குழு 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டு விருது பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

அவ்விருவரும் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் மோகன் முனசிங்க மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் வி. ராமநாதன் ஆவர்.

மோகன் முனசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான குழுவின் துணைத் தலைவராக, 2007 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார். அவ்வாறு செய்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்

அவரது கருத்துக்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த பல முக்கிய உலகளாவிய ஒப்பந்தங்களுக்கு பங்களித்தன.

இந் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் முனசிங்க,

“ஆசாஹி கிளாஸ் அறக்கட்டளையின் சிறந்த எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், உலகளாவிய சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான முதன்மையான 2021 ப்ளூ பிளானட் விருதை பெற்றதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாகவும் பெருமைப்படுகிறேன்

ஆசிரியர்கள், வழிகாட்டிகள், சகாக்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட எனது அறிவுசார் வளர்ச்சி மற்றும் உணர்ச்சி நுண்ணறிவுக்கு தாராளமாக பங்களித்த பலருக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன் என்றார்.