நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை பரப்பும் காற்று மாசு

நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை காற்று மாசு பரப்புவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.காற்று மாசுபடுவதன் மூலம் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக காற்றில் கார்பன்டை ஆக்சைடு வாயு அதிகமாக கலப்பதால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காற்று மாசுபடுவதன் மூலம் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பரவுவது ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசு பெருமளவில் உள்ளது. எனவே அங்கு வாழும் மனிதர்கள், விலங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ. மற்றும் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட காற்று போன்றவைகள் மீது ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வை சுவீடன் ஹிகிரன்ஸ்கா அகாடமியின் பேராசிரியர் ஜோகிம் லார்சன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். அதில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் என 864 பேரின் டிஎன்.ஏ. மாதிரிகளில் நோய்களை உண்டாக்க கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.