கெளதமியின் மறுப்பு செய்தி

திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 13 ஆண்டுகளாக கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்தவர் நடிகை கெளதமி. அதோடு கமல் நடித்த பாபநாசம் படத்தில் அவரது மனைவியாக நடித்தவர், அவர் நடித்த பல படங்களில் காஸ்டி யூம் டிசைனராகவும் பணியாற்றினார்.

அப்படி சபாஷ் நாயுடு படத்தில் அவர் டிசைனராக ஒர்க் பண்ணியபோது கெளதமிக்கும், ஸ்ருதிஹாசனுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவின. அதை யடுத்து, சமீபத்தில் கமலை விட்டு பிரிவதாக அறிவித்த கெளதமி, தனது மகள் சுப்புலட்சுமியுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார்.

மேலும், ஜீ தமிழ் சேனலில் நடன நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்கேற்று வரும் கெளதமி, தனது மகளை நடிகையாக்க வேண்டும் என்பதற்காகத்தான் கமலை விட்டு பிரிந்து வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் கெளதமியின் மகள் சுப்புலட்சுமி நாயகியாக நடிக்கயிருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் வெளியாகின.

அதையடுத்து அந்த செய்தி இணையதளங்களிலும் வேகமாக பரவியது.ஆனால், அதுகுறித்து கெளதமி கூறுகையில், என் மகளை நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. இருப்பினும், இப்போது அவர் படித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் நடிக்க வைத்தால் படிப்பு பாதிக்கும். அதனால் இப்போதைக்கு என் மகளை நடிக்க வைக்கும் ஐடியா இல்லை என்று கூறியுள்ளார்.