யாழ். மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 92 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவற்றின் அடிப்படையில் யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 71 பேர், அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 09 பேர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், சங்கானை பிரதேச வைத்திய சாலையில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.