கொரோனாவைக் காட்டி கூட்டமைப்பினர் வெளிநாடுகளில் நிதி பெற முயற்சியாம்!

தமிழ்த தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமண கோரிக்கை விடுத்துள்ளார்.

‘கொவிட் -19’ இற்கான தடுப்பூசி உட்பட மருத்துவ உபகரணங் களைக் கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் தயாராகவே இருக்கின்றனர்.

இதற்கான அனுமதியை அரசு வழங்கினால் திட்டத்தை செயற்படுத்தக்கூடியதாக இருக்கும்” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் விடுத்துள்ள அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே, தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி நிதி திரட்டிக் கொள்வதற்கான முயற்சியில் கூட்டமைப்பு இறங்கியுள்ளது. அவர்களின் போலி பரப்புரையை நம்ப வேண்டாம் என வெளிநாட்டில் வாழும் அனைத்து இன மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.