வடக்கில் நேற்று 80 பேருக்கு கொவிட் தொற்று

யாழ்ப்பாணத்தில் 41, கிளிநொச்சியில் 25 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 80 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 232 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டன.

இதில், யாழ்ப்பாணத்தில் 41 பேருக்கும், கிளிநொச்சியில் 25 பேருக்கும், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 6 பேருக்கும், மன்னாரில் இருவருக்குமாக 80 பேருக்கு நேற்று தொற்று அடையாளம் காணப்பட்டது.