நினைவு தூபியில் சுடரேற்றினார் சிவாஜிலிங்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (17), முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில், சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில், நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கும் சுடர் ஏற்றுவதற்கும், பலருக்கு எதிராக தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், இனப்படுகொலை வாரத்தின் ஆறாவது நாளான இன்று (17)  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்குச் சென்று, சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.