தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ஆரம்ப பணிகளில் இந்த அளவிற்கு பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
![செல்வராகவன் - தனுஷ் செல்வராகவன் - தனுஷ்](https://img.maalaimalar.com/InlineImage/202103311933256763_1_selva-2._L_styvpf.jpg)
தற்போது, இந்த அளவிற்கு ஆரம்ப பணிகளில் ஒருபோதும் பணியாற்றவில்லை என்றும் நானே வருவேன் திரைப்படம் படப்பிடிப்புக்கு தயாராகிறது என்றும் இயக்குனர் செல்வராகவன் கூறியிருக்கிறார். இது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.