கிட்டுபூங்காவின் முகப்பிற்கு தீ வைத்த விசமிகள்

இனந்தெரியாத நபர்கள் கிட்டுபூங்காவின் முகப்பிற்கு தீ வைத்ததால் அது எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

கிட்டுப்பூங்காவின் முகப்பு தீப்பற்றி எரிவதை கண்டதும் தீயணைப்பு பிரிவினருக்கு உடனடியாக தாங்கள் அறிவித்த போதிலும் அவர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு வரவில்லை இதனால் முகப்பு தீக்கிரையாவதை தடுக்க முடியவில்லை என முகப்பு தீப்பற்றி எரிவதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.