சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்ற இருவர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்று இருவர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்.

போலி கடவுச் சீட்டு மற்றும் போலி விசாவை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற பெண் ஒருவர் உட்பட இருவர் இன்று அதிகாலை கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.