கொரோனாதடுப்பூசி – அரசியல்வாதிகளுக்கு ஏன் முன்னுரிமை? ரவிகுமுதேஸ்

கொரோனா வைரஸ் மருந்துகளை வழங்கும் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளிற்கு முன்னுரிமை வழங்கக்கூடாது என அரசாங்க மருத்துவ ஆய்வுகூட தொழில்சார் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் ஆசிரியர்கள் உட்பட பல தரப்பினர் பொதுமக்களுடன் நேரடிதொடர்பில் உள்ளவர்கள் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகசுகாதார ஸ்தாபனம் முன்னுரிமை பட்டியல் ஒன்றை வழங்கியுள்ளது அதற்கு ஏற்பவே தடுப்பூசியை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பட்டியலில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முன்னுரிமை அளிக்கவேண்டியவர்கள் என அரசியல்வாதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.