ரவிகரனை விசாரணைக்காக அழைத்துள்ள காவல் துறை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக முல்லைத்தீவு ;காவல் துறை ;முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

குறிப்பாக ;நேற்று (14.02.2021) ;அழைப்பாணையுடன் ரவிகரனின் வீட்டிற்கு முல்லைத்தீவு ; காவல் துறையினர் சென்றிருந்தனர் காவல் துறையிடம் சென்றபோது ரவிகரன் வீட்டில் இருந்திருக்கவில்லை.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணை ஒன்றினை மேற்கொள்வதற்காக ;காவல் துறை ;நிலையம் வருமாறு முல்லைத்தீவு காவல் துறை ;ரவிகரனை அழைத்திருந்தனர். அந்தவகையில் காவல் துறையின் அழைப்பினை ஏற்று ரவிகரன் முல்லைத்தீவு ;காவல் துறை ;நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அந்தவகையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.