எல் கே (lk) டைாமைனின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல இணையதளங்கள் மீது இன்று (6) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது என இலங்கை கணனி அவசர ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என கேள்வியுடன் எல்கே டொமைன் தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தளங்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என்ற கூற்றுடன் அடங்கிய தகவல் ஊடுருவப்பட்ட தளங்களில் பதிவாகியுள்ளது.
இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், ஊடகவியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அச்சுறுத்தல், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் கொரோனா தொற்றினால் இறப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது தொடர்பான பிரச்சினைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை விதிக்கப்பட்டமை, இனவாத செயற்பாடுகள் மற்றும் இராணுவமயமாக்கல் குறித்தும் ; அதில் ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				