இலங்கையில் கொரோனா தடுப்பு மருந்தினை பயன்படுத்தியவர்கள் வழமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பயன்படுத்திய பலர் வழமையான பக்கவிளைவுகள் குறித்து தெரிவித்துள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தியவர்களில் குறிபிட்ட எண்ணிக்கையிலானவர்கள் வழமையான பக்கவிளைவுகளை எதிர்கொள்வார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடயம் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்தினை பயன்படுத்தியவரின் உடல் எவ்வாறு அதனை எதிர்கொள்கின்றது என்பதற்கான அறிகுறி இந்த பக்கவினைவுகள் என அரசமருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோhனா தடுப்பூசியை பயன்படுத்திய பின்னர் சிறிய காய்ச்சல் மூட்டுவலிகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பலர் முறைப்பாடு செய்துள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதவிர தலைவலி வாந்தி வயிற்றுவலி போன்றவற்றினால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தியவர்களுக்கு ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புகளை கண்காணிப்பதற்கான திட்டமொன்றை உருவாக்கியுள்ளோம் தடுப்பூசியை பயன்படுத்திய பின்னர் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இளம் வயதினர் எனவும் தெரிவித்துள்ளது.