பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொள்ள சாணக்கியனிற்கு தடை

வடகிழக்கில் தொடரும் இன அழிப்பிற்கு எதிரான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் போது மக்களை தூண்டிவிட தமிழ்தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகள் இந்தப்போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து பொலிஸார் செய்த முறைப்பாட்டின் கீழ் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.