பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தடையையும் மீறி தையிட்டியில் தனியார் நிலத்தில் விகாரை

யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளார்.

பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.