ரேகாவிற்கு கோரிக்கை வைத்த ரசிகர்கள்

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான ரேகாவிற்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து இருக்கின்றார்.

இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பொழுதே கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
ரேகா
 சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரேகா தனது பெண்ணுடன் இருக்கின்ற புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். ரேகாவை போலவே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் ரேகாவின் மகளை விரைவில் திரையில் பார்க்க வேண்டும் என்று ரேகாவின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.