மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. அவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் கடந்தாண்டு பீட்டர்பால் என்பவரை காதலித்து 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர்பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்தது சர்ச்சையை கிளப்பியது.
இதனால் வனிதாவுடன் நடிகைகள் சிலர் கடுமையாக மோதவும் செய்தனர். பின்னர் பீட்டர் பால், குடிபோதைக்கு அடிமையாக இருப்பதாக கூறி அவரைப் பிரிந்தார்.
இந்நிலையில் நடிகை வனிதா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். கடந்த 1995-ல் வெளியான விஜய்யின் சந்திரலேகா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் வனிதா. அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தற்போது வனிதாவுக்கு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
வனிதா
இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாம். படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆடம் தாசன் இந்த படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தில் நடிப்பதற்காக வனிதா உடல் எடையை குறைத்து இருக்கிறார்.