கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்து பிரிட்டன் கவலை

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் பிரிட்டன் தனது கரிசனைகளை தெரிவித்துள்ளது என இலங்கைக்கான பிரிட்டனின் தூதுவர் சாரா ஹல்டன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அடுத்தவாரம் வெளியாகவுள்ள ஐநாவின் அறிக்கையில் இது குறித்து ஐநா மனித உரிமை பேரவைக்கான விபரங்கள் அடங்கியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.