உலக நாடுகளுக்கிடையே கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை சம அளவில் பகிர்ந்தளிப்பதில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உலகில் கொரோனா தடுப்பு மருந்துகளை பெறுவதில் தங்கள் நாட்டுக்கே முன்னுரிமை அளிக்கும் ‘தடுப்பூசி தேசியவாதம்’ முழு வீச்சில் அதிகரித்து வருவதாகவும், தடுப்பூசி என்பது உலகப் பொதுப் பொருளாகக் கருதப்பட வேண்டும் அதனை எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும், குறிப்பாக பின் தங்கிய நாடுகளுக்கு தடுப்பு மருந்துகள் சென்று சேர் வதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் இந் நிலை மாற வேண்டும் என்றும் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு டெட்ரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal