சிறிலங்கா இராணுவ புலனாய்வு பயிற்சிப் பாடசாலை திறப்பு

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கரந்தெனியவிலுள்ள சிறிலங்கா  இராணுவ புலனாய்வு காவல் துறை  தலைமையகத்தில் புலனாய்வுப் பயிற்சிப் பாடசாலைக் கட்டிடத்தை நேற்று(18) திறந்து வைத்தார்.

இந்தப் பயிற்சிப் பாடசாலை இராணுவ அலுவலர்களுக்கு மட்டுமன்றி விமானப்படை, கடற்படை, காவல் துறை , இலங்கைச் சுங்கம், சிறைச்சாலைத் திணைக்களம் மற்றும் துறைமுக அதிகார சபை உறுப்பினர்களுக்கும் புலனாய்வுத்துறை கற்கை நெறிகளை வழங்கும்.

இந்தப் பயிற்சிப் பாடசாலையை வெளிநாட்டுத் துருப்புகளுக்காக எதிர்வரும் ஆண்டுகளில் திறப்பதற்கும் சிறிலங்கா  இராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.