புலம் பெயர்தோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியர்கள் முதலிடம் –ஐ.நா

உலகளவில், புலம் பெயர்ந்து வசிப்போரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.

தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து, வெளிநாடுகளில் வசிப்போர் குறித்து, 2020ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை, ஐ.நா., மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு அண்மையில் வெளியிட்டது.

இவ் அறிக்கையின் அடிப்படையில் ” இந்தியாவைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், வெளிநாடுகளில் வசித்துவருவதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் தான், இந்தியர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அனைத்து கண்டங்கள் மற்றும் பிராந்தியங்களில், வளைகுடா முதல், வட அமெரிக்கா வரையிலும், அவுஸ்திரேலியா முதல், பிரித்தானியா வரையிலும், இந்தியர்கள் தான் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ, ரஷ்யா, சீனா, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அதிக அளவில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 179 நாடுகளில், அமெரிக்கா, ஜெர்மனி, சவுதி அரேபியா, ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகளில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.