71 பெண் கைதிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது

காலி சிறைச்சாலையின் 39 பெண் கைதிகளுக்கு இன்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் கிளிநொச்சியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு நாளை கொண்டு செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை போகம்பர சிறைச்சாலையின் மேலும் 32 பெண் கைதிகளுக்கு கொவிட்-19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதுடன் அவர்கள் கல்லெல்ல கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது