வடக்கில் இன்று 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் இன்றைய தினமும் 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிளிநொச்சி மாவட்டத்தைச்  சேர்ந்த 7 பேருக்கும் யாழ்ப்பாணம் மருதங்கேணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் சங்கானையைச் சேர்ந்த ஒருவருக்கும் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இ தேவேளை யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.