வவுனியாவில் கர்ப்பிணிக்கு கொவிட்-19 தொற்று; சில பகுதிகள் முடக்கம்

வவுனியாவில் விரைவான அன்டிஜென் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா வேப்பங்குளத்தின் சில பகுதிகள் காவல் துறையால் முடக்கப்பட்டுள்ளன.

வவுனியா வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அன்டிஜென் பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த பெண்ணின் இருப்பிடமான வவுனியா வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கை மற்றும் 2,3,4,5 ஆம் ஒழுங்கைப் பகுதிகள் பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டு பாதுகாப்பு கடைமைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பெண்ணுக்கு அன்டிஜென் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போதே தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனினும் குறித்த பெண்மணி வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

பி.சி.ஆர் முடிவுகள் கிடைக்கப்பெற்றதும் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்தார்.