சிறிலங்காவில் விமான நிலைய திறப்பு எப்போது?

ஜனவரி 22 க்குப் பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து வணிக விமானங்களுக்கும் விமான நிலையத்தை திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

இன்று (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திட்டம் அதன் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.