சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி சிம்ம ராசியுடைய அமைச்சர்

இலங்கைக்கு அடுத்த முறை புதிய தலைமைத்துவம் ஒன்று கிடைக்கவுள்ளதாக இலங்கையின் பிரபல சோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராகச் செயற்படுவதாகவும் அவர் சிம்ம ராசி உடையவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ராஜபக்ஷ குடும்பத்துக்கு வெளியேயுள்ள ஒருவராவார். அவரது பெயரை தற்போது வெளிப்படுத்த முடியாது. அவரது ஜாதகம் என்னிடம் உள்ளது எனத் தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறவில்லை என்றால் என்னை நானே துப்பாக்கியில் சுட்டுக்கொல்வதாகக் கூறினேன். எனினும் அது சோதிடத்தில் இருந்த விடயம் அல்ல. மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் வெற்றி பெறச் செய்வதற்கே அன்று நான் அவ்வாறு கூறினேன் என்றார்.

இணையத்தள ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.