இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தைத் தாண்டியது

இலங்கை மேலும் 655 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 503 திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

ஏனைய 147 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணி யில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 05 பேர் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 790 ஆக உயர்ந் துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 8 ஆயிரத்து 848 பேர் சிகிச்சை பெற்று வரு கின் றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொ த்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 793 ஆக அதி கரித்துள்ளது.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 152 ஆக அதி கரித்துள்ளது.