வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.