கொழும்பு மாவட்டமே ஆபத்தானதாக காணப்படுகின்றது

மேல்மாகாணத்தில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் பரவல் காணப்படுகின்றது குறிப்பாக கொழும்பு மாநாகரசபை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆபத்து நிலவுகின்றது என தொற்றுநோயியல் வைத்தியர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையும் புறநகர்பகுதிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன கொழும்பிலும் கம்பஹாவிலும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒப்பீட்டளவில் மேல்மாகாணமே மிகவும் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது