டெங்கும், கொரோனாவும் வந்த நோயாளி முதன்முறையாக இனங்காணப்பட்டார்

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றும், டெங்குக் காய்ச்சலும் இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்குக், டெங்குக் காய்ச்சலும் இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் டெங்கு விசேட சிகிச்சை மத்திய நிலையத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.