அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் சீனா குறித்த நிலைப்பாடு மாறாது

அமெரிக்க தேர்தல் முடிவுகள் எவ்வாறானவையாக அமைந்தாலும் சீனா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடுகள் மாற்றமடையப்போவதில்லை என சீனாவிற்கான முன்னாள் இந்திய தூதுவர் கௌதம் பம்பவாலே தெரிவித்துள்ளார்


ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றால் அவர் செயற்படும் விதத்தில் வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் அமெரிக்காவின் சீனா குறித்த கொள்கையில் மாற்றங்கள் இருக்காது என முன்னாள் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தலில் யார் வென்றாலும் சீனா குறித்த கொள்கையும் அணுகுமுறையும் மாறப்போவதில்லை டிரம்பும் பைடனும் செயற்படும் விதத்தில் மாற்றங்கள் இருக்கலாம் ஆனால் கொள்கைகள் மாறப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா ஜனநாயக கட்சியின் வேட்பாளர் வெல்லவேண்டும் என்றே விரும்புகின்றது என அறிய முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பைடன் வெல்வதையும் டிரம்ப் தோற்பதையுமே சீனா ஆய்வாளர்களும் அவதானிகளும் விரும்பக்கூடும் புதிய ஜனாதிபதி செயற்படும் விதத்தில் மாற்றங்களை அவர்கள் விரும்பக்கூடும் , டிரம்ப் சீனா குறித்து கடுமையாகயிருந்துள்ளார் என அவர்கள் கருதுகின்றனர் எனவும் இந்தியாவின் முன்னாள் தூதுவர் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவும் சீனாவிற்கும் இடையில் வர்த்தக தொழில்நுட்ப போர் இடம்பெறுகின்றது,இந்தோ பசுவிக்கில் நெருக்கடியான நிலை காணப்படுகின்றது,தென்சீனாவில் அமெரிக்காவும் வலுவாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் தாங்கள் இந்தியாவின் பக்கமிருப்பதை தெளிவாக தெரிவித்துள்ளார்,இதன் காரணமாகவும் சீனா பைடனை விரும்பக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.