இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,335 ஆக உயர்வு

இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11,335 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் 275 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 232 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என தெரியவந் துள்ளது.

ஏனைய 43 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது மினுவாங்கொடை – பேலியகொட கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றா ளர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 857 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் 344 பேர் கொரோனா தொற்றிலிருந்து குண மடைந்த நிலையில் வைத்தியசாலைகளை விட்டு வெளி யேறியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் எண் ணிக்கையும் 5ஆயிரத்து 249 ஆக பதிவாகியுள்ளது.

தற்போது இரண்டு வெளிநாட்டினர் உட்பட 6,065 கொ ரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள 46 வைத் தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 389 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 21 ஆக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.