ஆஸ்திரேலியா: 5 மாதங்களில் முதன்முறையாக, உள்ளூர் அளவில் புதிதாகக் கிருமித்தொற்று இல்லை

ஆஸ்திரேலியாவில், கடந்த 5 மாதங்களில் முதன்முறையாக, உள்ளூர் அளவில் யாருக்கும் கிருமித்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்ட விக்டோரியா மாநிலத்தின் மெல்பர்ன் நகரில், முடக்கநிலை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் அங்கு உணவகங்களிலும் மதுபானக் கூடங்களிலும் திரண்டுள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில், 60 பேருக்கு இன்னும் கிருமித்தொற்று உள்ளது. அவர்களில் ஒருவருக்கு எவ்வாறு கிருமித்தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.