ஜனநாயகத்தை கொலை செய்கின்றது அரசாங்கம்

சிறிலங்கா  அரசாங்கம் தேசத்தின் ஜனநாயகத்தை 20வது திருத்தம் மூலம் கொலைசெய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா டுவிட்டரில் சற்று முன்னர் பதிவு செய்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் தங்களை ஆட்சிக்குகொண்டுவந்தவர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களின் விருப்பத்திற்கு எதிராக அரசாங்கம் ஏதேச்சதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது என ஹர்சா டி சில்வா பதிவிட்டுள்ளார்.