சிறிலங்காவிற்கு பி. சி .ஆர். பரிசோதனை இயந்திரங்களை வழங்கிய அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்களை சிறிலங்கா கடற்படைக்கு, கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் வழங்கியது.

அதன்படி, அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறையால் 2 பி.சி.ஆர் இயந்திரங் களும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தால் 2 பி.சி.ஆர் பரிசோ தனை இயந்திரங்களும் கடற்படைக்கு வழங்கப்பட்டன, இந்த பி.சி.ஆர் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 4 மாதிரிகள் சோதனை செய்வதற்கான திறன் கொண்டுள்ளது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் ஷொன் அன்வின் வழங்கிய பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்கள், கடற்படை சார்பில் கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர் கொமடோர் பிரசன்ன மஹவித்தனாவால் பெறப்பட்டன.

குறித்த நிகழ்வில் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.