வடக்கு ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முல்லைத்தீவில் வடக்கு ஊடகவியலாளர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

முல்லை மாவட்ட செயலக முன்றலில் போராட்டத்தை ஆரம்பித்த வடக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்து பொலிஸ் நிலைய முன்றலில் முற்றுகையிட்டு கவனயீர்ப்பை செய்த பின்னர் முல்லைத்தீவு வனவள திணைக்கழத்துக்கு முன்னும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு மரங்களையும் நாட்டியிருந்தனர். அத்துடன் ஊடகவியலாளர்களால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.