முடக்கப்பட்டது அனலைதீவு – ஏன்?

மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அனலைதீவுப் பகுதியை அதிகாரிகள் முற்றாக முடக்கியுள்ளனர்.

இன்று காலை அனலைதீவுப் பகுதியில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டிருந்த இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப் பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவுப்பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுவதைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் அனலைதீவுப் பகுதியை முடக்கியுள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் நடமாடியதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து காரைநகரில் அடையாளம் காணப்பட்ட ஐந்து வீடுகளை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

தீவகத்துக்கான போக்குவரத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.