அதி உயர் அபாய வலயமாக வெயாங்கொட பிரதேசம்!

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள வெயாங்கொட பிரதேசத்தில் மிக அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து அந்தப் பிரதேசம் அதி உயர் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்ததாக அதிகளவிலான எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் தற்போது இனங்காணப்பட்டு வரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.