ஒலுமடு ஆதிலிங்கேகேஸ்வரர் திருவிழாவுக்கு நீதிமன்றம் அனுமதி!!

நெடுங்கேணி ஒலுமடு ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தை தடுக்கக் கோரி நெடுங்கேணிப்பொலிசாரினாலும் தொல்லியல் திணைக்களத்தினாலும் வவுனியா நீதிமன்றத்தில் கோரப்பட்ட விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. ஆலய உற்சவத்தை வழமைபோன்று நடாத்தவும் மன்று அனுமதிவழங்கியுள்ளது.

திருவிழாக்காலங்களில் ஆலய நிர்வாகத்தினருக்கு எதுவித இடையூறோ அச்சுறுத்தலோ செய்யக்கூடாது எனவும் நெடுங்கேணி பொலிசாருக்கு நீதவான் பணிப்பு வழங்கியுள்ளார்.

குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணி காண்டீபன்இ சிரேஷ்ட சட்டத்தரணி தயாபரன்இ சிரேஷ்ட சட்டத்தரணி திருவருள்இ சிரேஷ்ட சட்டத்தரணி குருஸ் உள்ளிட்ட பதினாறு சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.