20வது திருத்தத்தின் நகல்வடிவில் முரண்பாடுகள் – மீளாய்வு குழு கருத்து

உத்தேச 20வது திருத்தத்தின் நகல்வடிவம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டகுழுநகல்வடிவில் பல முரண்பாடுகள் இருப்பதாக கருத்து வெளியிட்டுள்ளது.

9பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்களான அமைச்சர்கள் விமல்வீரவன்சவும் உதயகம்மன்பிலவும் இதனை தெரிவித்துள்ளனர்.

நகல்வடிவம் குறித்த கரிசனைகளை ஜனாதிபதி பிரதமரிடம் தெரிவிக்கப்போவதாக அவர்கள்தெரிவித்துள்ளனர்.
நகல்வடிவில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானிப்பார்கள் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் அனைத்துவிடயங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர்விமல்வீரவன்ச அனைத்து பரிந்துரைகளும் அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆளும் அமைப்பு தொடர்பான விடயங்களுக்கு தீர்வை காண்பதற்குஅனைத்துஉறுப்பினர்களும் இணங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் வெளிசக்திகள் ஆட்சி விவகாரங்களில் தலையிட அனுமதிக்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.