ஆஸ்திரேலியா: விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றால் நேற்று 59 பேர் மாண்டனர்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றால் நேற்று 59 பேர் மாண்டனர்; புதிதாக 81 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை அளவில் இரண்டாவது பெரிய மாநிலம் விக்டோரியா. மாநிலத் தலைநகர் மெல்பர்னில் ஆறு வார முடக்கம் நடப்பில் உள்ளது. அடுத்த வாரம் அது முடிவுறும்.

ஆனால் கிருமித்தொற்று உறுதியாவோரின் அன்றாட எண்ணிக்கை அதிகரித்தால், கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கருத்துரைத்தனர்.