பிரான்சில் தீவிபத்து – ஈழத்தமிழர் ஒருவர் சாவு!

நேற்று முன்தினம் புதன்கிழமை பரிசில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் சாவடைந்துள்ளார்.

பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் Place d’Italie தொடருந்து நிலையம் அருகே boulevard Vincent Auriol வீதியில் உள்ள உள்ள 168 இலக்கக் கட்டிடத்தின் நான்காவது தளத்தின் ஒரு வசிப்பிடத்தினுள்ளேயே மு.ப 10:30 மணி அளவில் தீ பற்றியுள்ளது.

சம்பவ இடத்திற்குக் உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்தனர். 60 தீயணைப்பு படையினர் 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்து மு.ப. 11:30 முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கட்டிடத்தின் நான்காவது தளம் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஒருவர் சாவடைந்துள்ளதாக அறிய முடிகிறது. சாவடைந்தவர் வவுனியாவைச் சேர்ந்த பாலசுந்தரம் சுஜீவன் (35 வயது) என அறிய முடிகிறது. இவருடன் மேலும் மூவர் அதே அறையில் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் மூவரும் வெளியே சென்ற பின்னரே தீ பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.