கனடாவில் ஈழத்து இளைஞர் படகு விபத்தில் பலி!

கனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் நேற்று வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் படகு ஒன்று விபத்துக்கு உள்ளான போது வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த இலங்கைகொன் பல்லவநம்பி (46வயது) என்பவர் மிகவும் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இவர் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் அறியப்படுகிறது. இச்சம்பவத்தின் போது 7 தமிழர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவர் படகிலிருந்து தூக்கியெறியப்பட்டு நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்றதும் உடனடியாக காவல் துறையினரும் , மருத்துவ அவசரஉதவியும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றதாகவும், மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன. படகு கரையிலிருந்து புறப்பட்டு 5 நிமிட இடைவெளியிலேயே இந்த விபத்து நடைபெற்றதாகவும் படகின் அதிவேகமே விபத்துக்கான காரணமென விபத்தினை பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். இதேவேளை ரொரன்ரோ காவல் துறையினர்   தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.