முதலில் அம்மா… நேற்று அப்பா.. அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகை நிலா

முதலில் அம்மா… நேற்று அப்பா.. என்று நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் கொரோனாவில் இருந்து வெகு விரைவில் மீள்வது மகிழ்ச்சியளித்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில், என் நண்பர் ஒருவர் கொரோனாவினால் தனது பெற்றோரை இழந்து விட்டார்.
மீரா சோப்ரா வின் பதிவு
முதலில் அம்மா, நேற்று அப்பா. சில விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லுங்கள். மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.