20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில்

20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜிஎல்பீரிஸ் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியமில்லை மூன்றில் இரண்டு போதும் என தெரிவித்துள்ளார்.

20வது திருதத்தத்தில் காணப்படுகின்ற விடயங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதும் மக்களின் கருத்து அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக 20வது திருத்தம் சில வாரங்களில் நிறைவேற்றப்பட்டுவிடும் என அவர் தெரிவித்துள்ளார் .

புதிய திருத்தங்கள் நாட்டின் முதல்பிரஜையின் அதிகாரங்களை வலுப்படுத்தும், பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை வலுப்படுத்தும் என ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஜனாதிபதியின் பதவிக்காலத்தையோ அல்லது தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தையோ நீடிப்பதற்கு ஒரு போதும் முயலமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய திருத்தங்கள் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை நீக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.